Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

சென்ட்ரல் வங்கியில் மாதம் ரூ. 15,000 உதவித்தொகையுடன் 3000 காலிப்பணியிடங்கள்!

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய இடங்களில் காலியிடங்கள் உள்ளன.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்: Apprenticeship Training

காலியிடங்கள் மொத்த எண்ணிக்கை: 3000

தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் அரசு அங்கீகாரத்திற்கு உட்பட்ட கல்வி வாரியத்தில் ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் தேர்ச்சி செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நோக்கவும்.

ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சம்பளமாக மாதம் ரூ. 15,000/- வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது 20 முதல் 28 க்குள் இருந்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை கவனிக்கவும்.

தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள், காலியிடம் ஏற்பட்டுள்ள மாநிலத்தின் உள்ளூர் மொழி பேசும் திறன், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நேர்முகத் தேர்வின் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 12 மாதங்களுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும். மேலும் விவரங்கள் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை கவனிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்:

மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.400 + எஸ்டி எஸ்சி, எஸ்டி, அனைத்து பிரிவைச் சேர்ந்த பெண்கள், இடபுள்யுஎஸ் பிரிவினர் ரூ.300 + ஜிஎஸ்டி, மற்ற அனைத்து பிரிவினரும் 800 + ஜிஎஸ்டி 18 சதவிகிதம் சேர்த்து ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதற்கான அதிகாரபூர்வமான தளத்தில் விண்ணப்படிவம் பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள கடைசி நாளுக்குள் (27.03.2024) பூர்த்திசெய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

27.03.2024

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புஇங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *