பெரியபுராணம் Notes TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024
பெரியபுராணம் TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024 குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN forest, ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கும் உதவும். அனைத்து PDF குறிப்புகளும் இணையத்தில் வேறு நபர்களால் பகிரப்பட்டவை.
பெரியபுராணம்
பெரியபுராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் என்பது சேக்கிழார் அவர்களால் பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவும் கொண்டதாக இயற்றப்பெற்ற சைவ காப்பியமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டும், அவர் போற்றிய சைவ அடியார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் இந்நூலில் விவரிக்கிறார்.
பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம் காண்டத்தில் எட்டுச் சருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின் பெயர்களாக உள்ளது.
காப்பிய கதையானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்றுச் சைவ அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாகக் கயிலாயத்தில் முடிகிறது.
முதற் காண்டத்தில்,
· திருமலைச் சருக்கம்,
· தில்லை வாழ் அந்தணர் சருக்கம்,
· இலை மலிந்த சருக்கம்,
· மும்மையால் உலகாண்ட சருக்கம்,
· திருநின்ற சருக்கம்
என்ற ஐந்து சருக்கங்களும்,
இரண்டாம் காண்டத்தில்
· வம்பறா வரிவண்டுச் சருக்கம்,
· வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்,
· பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்,
· கறைக்கண்டன் சருக்கம்,
· கடல்சூழ்ந்த சருக்கம்,
· பத்தராய்ப் பணிவார் சருக்கம்,
· மன்னிய சீர்ச் சருக்கம்,
· வெள்ளானைச் சருக்கம்
என்னும் 8சருக்கங்களும் அமைந்துள்ளன.
13 சருக்கங்களிலும் உள்ள பாடல்களின் எண்ணிக்கையும் அவற்றில் பேசப்படும் சிவனடியார்களின் எண்ணிக்கையும் பின்வருமாறு:
சருக்க எண் | பாடல்கள் | அடியார்கள் |
1 | 349 | – |
2 | 201 | 7 |
3 | 422 | 7 |
4 | 298 | 6 |
5 | 633 | 7 |
6 | 1734 | 6 |
7 | 303 | 6 |
8 | 115 | 8 |
9 | 41 | 5 |
10 | 47 | 5 |
11 | 24 | 7 |
12 | 58 | 7 |
13 | 53 | 1 |
TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள் – Download Here
தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.
Download PDF File Below 👇👇👇