சீறாப்புராணம் TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024
சீறாப்புராணம் TNPSC PREVIOUS YEAR QUESTIONS 2024 குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN forest, ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கும் உதவும். அனைத்து PDF குறிப்புகளும் இணையத்தில் வேறு நபர்களால் பகிரப்பட்டவை.
சீறாப்புராணம்
இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்குவது சீறாப்புராணம். ‘சீறா’ என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும். இதற்கு ‘வாழ்க்கை ‘ என்பது பொருள். புராணம் – வரலாறு. நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் இந்நூலை வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்க உமறுப்புலவர் இயற்றினார் என்பர். இந்நூல் விலாதத்துக் காண்டம், நுபுவ்வத்துக்காண்டம், ஹிஜிறத்துக் காண்டம் என்னும் மூன்று காண்டங்களையும் 92 படலங்களையும் 5027 விருத்தப் பாடல்களையும் கொண்டது. நூலை முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்திய காரணத்தால் பனி அகமது மரைக்காயர்’ இதன் தொடர்ச்சியாக சின்னச்சீறா என்ற நூலைப் படைத்துள்ளார். உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர். கடிகை முத்துப் புலவரின் மாணவர். நபிகள் நாயகத்தின் மீது முதுமொழிமாலை என்ற நூலையும் இயற்றியுள்ளார். வள்ளல் சீதக்காதி, அபுல்காசிம் மரைக்காயர் ஆகியோர் இவரை ஆதரித்தனர்.
‘சீறத்துந்நபி’ என்ற அரபித் தொடரின் சுருக்கமே ‘சீறா’ என்பர்.
சீறா – வாழ்க்கை
புராணம் – வரலாறு
இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் வரலாற்றை எடுத்துக்கூறும் நூல் சீறாப்புராணம்.
அப்துல் காதிர் மரைக்காயர் என்ற வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளின் படி உமறுப்புலவரால் இயற்றப்பட்டது.
வள்ளல் சீதக்காதி நூல் முழுமை பெறும் முன்பாகவே இறந்து விட்டதால் அபுல்காசிம் என்ற வள்ளலின் உதவியால் சீறாப்புராணம் நிறைவுற்றது.
இஸ்லாமிய சமய உண்மைகளும், நம்பிக்கைகளும் பற்றிய விரிவான நூல்.
ஆசிரியர் – உமறுப்புலவர் (எட்டயபுரம் கடிகை முத்துப்புலவரின் மாணவர்)
பெரும்பிரிவு – காண்டம் (3)
உட்பிரிவு – படலம் (92)
· விலாதத்துக்காண்டம் (24 படலங்கள்)
· நுபுவத்துக்காண்டம் (21 படலங்கள்)
· ஹிஜ்ரத்துக்காண்டம் (47 படலங்கள்)
விருத்தப்பாக்கள் – 5027
சமயம் – இஸ்லாம்
காலம் – கி.பி.17ம் நூற்றாண்டு
சீறாப்புராணத்தில் கூறப்பட்டுள்ள நபிகளின் வரலாறு முழுமையாக அமையாததால், பிற்காலத்தில் பன் அஹமது மரைக்காயர் என்பவர் ‘சின்ன சீறா’ எனும் பெயரில் நூல் இயற்றி அதை நிறைவு செய்தார்.
“திருவினும் திருவாய் பொருளினும் பொருளாய்த்
தெளிவினும் தெளிவதாய்ச்………”
எனும் சீறாவின் கடவுள் வாழ்த்துப்பாடல் பொது நோக்கோடு எழுதப்பட்டவை.
இந்நூல் பரங்கிப் பேட்டையில் உள்ள அபுல்காசிம் மரைக்காயர் வீட்டு முன்பு அரங்கேற்றப்பட்டது.
சீறாப்புராணத்தைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக எழுதப்பெற்றவை ‘சின்னச்சீறா’, ‘சீறாப்புராணம் இரண்டாம் வாலியம்’
‘சீறாப்புராணம் இரண்டாம் வாலியம்’ எனும் நூலின் ஆசிரியர் இரவணசமுத்திரம் ஹாஜி.மன்னான் முஹம்மது காதிரி சக்திரி.
நபிகளாரின் பிறப்பு, அவரது இளமைவாழ்க்கை எனத் தொடங்கி அவர் இஸ்லாமிய நெறியை வளர்க்க மக்கா நகர் விட்டு மதினா நகர் சென்று அங்கு அறநெறி வளர்த்த வரலாறு வரை உமறுப்புலவரின் சீறாப்புராணம் விளம்புகிறது.
கதையும், கதைக்கலமும் இஸ்லாமியத்தோடு இருந்தாலும் தமிழ்ச்சாயல் நிரம்பப் பெற்ற காப்பியம் சீறாப்புராணம்.
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருத்தூதர் நபிகள் நாயகத்தின் சீரிய வரலாற்று இலக்கியம் சீறாப்புராணம். இது தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியமாகும். பகையும் வறுமையும் நோயும் தீண்டாப் பொருள்வளம் நிறைந்த மதீனா நகரில் தானத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினைச் செலவியற் காண்டம் (ஹிஜிறத்துக் காண்டம்) காட்சிப்படுத்துகிறது.
TNPSC குரூப் 1, குரூப்2, குரூப் 4, TNUSRB கான்ஸ்டபிள் மற்றும் SI, TN வனம், ரயில்வே, வங்கி போன்ற அனைத்து அரசு தேர்வுகளுக்கு தேவையான அனைத்து நோட்ஸ்களும் நமது இணையதளத்தில் உள்ளது. நல்ல பயிற்சி நிச்சயமாக வரவிருக்கும் TNPSC தேர்வுகளுக்கு உதவும். நீங்கள் அடைய நினைக்கும் இலக்கை அடையும் வரை ஒருபோதும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். உங்கள் அரசு வேலையை அடைய எங்கள் வலைதளம் சார்பாக எங்களுடைய வாழ்த்துக்கள் – Download Here
தடைகள் பல வந்தாலும், உங்களுடைய இலக்கு தேர்வில் வெற்றி பெறுவது மட்டுமே, ஒருபோதும் முயற்சியை கைவிடாதீர்கள்.
Download PDF File Below 👇👇👇