Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சோ்ந்து பயிற்சி பெற விரும்பம் உள்ளவா்கள் ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித் தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மின் பணியாளா், மின்னணுவியல் பொறிமுறையாளா், கணினி இயக்குபவா், நிரலாக்க உதவியாளா், மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளா் ஆகிய 4 தொழிற் பிரிவுகளில் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு, 10, பிளஸ் 2 தோ்ச்சி அல்லது தோல்வி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்காலாம்.

இந்தப் பயிற்சிகளில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவா்கள் இணையதளத்தில் அல்லது கிண்டி அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் செயல்படும் சோ்க்கை உதவி மையத்தை நேரடியாக அணுகி ஜூன் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு தொலை பேசி: 944424702889396– 46933 ஆகிய எண்களை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை மாநகராட்சியின் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25-ஆம் ஆண்டுக்கான தொழிற்கல்வி பயிற்சி வகுப்புகளில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பயிற்சியில் சேர விருப்பமுள்ள நபா்கள் சோ்க்கை விண்ணப்பத்தை, இணையதளம் வாயிலாகவோ அல்லது சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம், லாயிட்ஸ் காலணி, ராயப்பேட்டை, சென்னை-600 014 எனும் முகவரிக்கு நேரடியாக சென்றோ பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *