Shopping cart

close

No products in the cart.

Call us Today +91 9363 511 010

புதிய தொழிற்பள்ளிகள் துவங்க இந்த இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்!

புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல்/அங்கீகாரம் நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; 2024-2025 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல்/அங்கீகாரம் நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 29.02.2024 நள்ளிரவு 11:59 மணி வரை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், சேலம் மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலகம், 0427 2900142 தொலைபேசி எண் மற்றும் rjdtslm@gmail.com மின்னஞ்சலை தொடர்பு கொண்டும் விபரங்களை பெறலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *